வெடுக்குநாறி மலையில் தொடரும் பதற்றம் : கஜேந்திர உட்பட ஆறுபேர் கைது

UPDATE 2 இராணுவ, பொலிஸ் முற்றுகைக்குள் மின்னினைப்பு முற்றாக துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் தொடந்து ஓம் நமசிவாய என உச்சரித்து வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

UPDATE 1 வெடுக்குநாறி மலையில் வழிபாட்டில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உட்பட ஆறு பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

என்றாலும், கைதுசெய்யப்பட்டு சில நிமிடங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனை விடுவித்துள்ள பொலிஸார் ஏனையோரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

நீதிமன்ற அனுமதியுடன் வழிபாடுகளை மேற்கொள்ளச் சென்ற பக்தர்களுக்கு தடைகளை ஏற்படுத்தி இன்று காலையில் இருந்து பொலிஸார் மற்றும் இரணுவத்தினர் அசௌகரியங்களை ஏற்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக 6 மணிக்கு மேல் யாரையும் ஆலயத்தில் தரித்து நிற்க வேண்டாம் எனவும் அவ்வாறு தரித்தால் கைது செய்ய நேரிடும் எனவும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் ஆலயத்தில் இரவு வழிபாட்டில் ஈடுபட்டிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இரு உறுப்பினர்கள் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேநேரம் வவுனியா – வெடுக்குநாறி ஆலய பூசகர் உட்பட நிர்வாகசபை உறுப்பினர் இருவரும் வவுனியா நீதவான் நீதமன்றத்தினால் ரு இலட்ச ரூபாய் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *