வெப்பமான வானிலை : மீண்டும் எச்சரிக்கை விடுத்த வளிமண்டலவியல் திணைக்களம்

நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் நாளை (09) வெப்பநிலை அதிகமாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடமேற்கு, தெற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மொனராகலை, இரத்தினபுரி, மன்னார், வவுனியா முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் சில இடங்களிலும் அதிக வெப்பம் நிலவும்.

மனித உடலால் உணரப்படும் வெப்பத்தை விட அதிகளவில் இந்த வெப்பநிலை பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ஆகவே அதிகளவில் தண்ணீர் குடிப்பது, நிழலான இடங்களில் ஓய்வெடுப்பது, வெளிப்புறச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *