எம்.பி., ராஜினாமா : வெற்றிடமான உறுப்பினர் பதவி தொடர்பாக அறிவிப்பு

CBC TAMIL NEWS : தற்போது ஏற்பட்டுள்ள நாடாளுமன்ற வெற்றிடம் குறித்து நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் இலங்கை தேர்தல்கள் ஆணையாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

அனுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன பதவி விலகியதையடுத்து அவரது நாடாளுமன்ற ஆசனம் வெற்றிடமாகியுள்ளது.

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரான உத்திக பிரேமரத்ன தனது இராஜினாமா கடிதத்தை நாடாளுமன்ற பிரதிப் பொதுச் செயலாளரிடம் நேற்று 27 அன்று கையளித்தார்.

இதேவேளை, குறித்த வெற்றிடமாகியுள்ள பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற வெற்றிடத்தை முத்துகுமரன நிரப்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.