அலெக்ஸி நவல்னியின் உடல் இரண்டு வாரங்களுக்கு விடுவிக்கப்படாது !

ரஷ்யாவில் சிறையில் இருந்தபோது உயிரிழந்த அலெக்ஸி நவல்னியின் உடல் இரண்டு வாரங்களுக்கு விடுவிக்கப்படாது என அவரது குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த உடல் இரசாயன பகுப்பாய்வுக்காக வைக்கப்பட்டுள்ளதாக அலெக்ஸி நவல்னியின் தாயாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேநேரம் சுதந்திர ரஷ்யாவிற்காக போராடிய தனது கணவரை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கொன்றுவிட்டதாக அலெக்ஸி நவல்னியின் மனைவி நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார்.