அடுத்தவாரம் இலங்கை வருகின்றார் பொதுநலவாய நிறுவன தலைவர் : அரசாங்கத்துடனும் பேச்சு நடத்த திட்டம்

தென்கிழக்கு ஆசியாவிற்கு விஜயம் மேற்கொண்டு வரும் பொதுநலவாய நிறுவன மற்றும் முதலீட்டு சபையின் தலைவர் மார்லன்ட் லோர்ட், அதன் ஒருபகுதியாக இலங்கைக்கும் விஜயம் செய்யவுள்ளார்.

இலங்கையின் தனியார் துறையும் அரசாங்கமும் அடுத்த வாரம் பொதுநலவாய வர்த்தக மற்றும் முதலீட்டு அமைப்பின் தலைவரிடமிருந்து புதிய அறிவுரைகளை பெற்றுக்கொள்ளவுள்ளது.

அதன்படி எதிர்வரும் 19 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவையும் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவை சந்திக்கவுள்ளார்.

இதனை அடுத்து நாளான 20 ஆம் திகதி பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக்கையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

56 பொதுநலவாய உறுப்பு நாடுகள் முழுவதும் வர்த்தகம் மற்றும் முதலீட்டை எளிதாக்கும் ஒரு வணிக, இலாப நோக்கற்ற அமைப்பாக பொதுநலவாய நிறுவன மற்றும் முதலீட்டு சபை உள்ளமை குறிப்பிடத்தக்கது.