இந்திய மீனவர்கள் 20 பேர் நிபந்தனையோடு விடுதலை !

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டின் கீழ் நெடுந்தீவு கடற்பரப்பில் அண்மையில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 20 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 03 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களின் வழக்கு விசாரணைக்கு இன்று ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இவர்களில் 20 பேருக்கு, நிபந்தனைகளுடன் 5 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 18 மாத சிறைத் தண்டனையில் விடுதலை செய்யப்பட்டனர்.

இரு படகுகளின் ஓட்டுனர்களுக்கும் ஆறு மாத கால சிறைத் தண்டனை வழங்கப்பட்டதுடன், 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

அத்துடன் ஒரு மீனவர் இரண்டாவது தடவையும் எல்லை தாண்டி வந்ததனால் அவருக்கு ஒரு வருட கால சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் சட்டரீதியான நடவடிக்கைகளை நிறைவுற்ற பின்னர் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *