மணிப்பூர் வன்முறை : 2 பேர் உயிரிழப்பு, 25 பேர் காயம்

மணிப்பூர் மாநிலம் சுராசந்த்பூரில் நடந்த வன்முறையில் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 25 பேர் காயமடைந்துள்ளனர்.

பணிநீக்கம் செய்யப்பட்ட காவலருக்கு ஆதரவாக குக்கி இனத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்று கூடியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

400க்கும் மேற்பட்டோர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய அதேவேளை அலுவலகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது.

இதையடுத்து, பதற்றம் அதிகரிக்க பொலிஸார் தடியடி மற்றும் கண்ணீர் புகை தாக்குதல் நடத்திய நிலையில் வன்முறை கட்டுப்படுத்த மாவட்டத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

குக்கி – மெய்தி சமூகங்களுக்கு இடையே கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கிய இந்த மோதல் பல மாதங்களாக நீடித்து வருகிறது நிலையில் இந்த மோதலில் 170க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *