ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்கள் தொடர்பான விசேட அறிவிப்பு !

CBC TAMIL NEWS : எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பின் படி நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், 2025 ஆம் ஆண்டிலேயே பொதுத் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அதற்கான ஒதுக்கீடுகள் அடுத்தாண்டு வரவு செலவுத்திட்டத்தில் மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளது.

தேர்தலை நடத்துவது தேர்தல்கள் ஆணைக்குழுவின் பொறுப்பு என்பதை சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி ஊடகப் பிரிவு, தேவை ஏற்பட்டால் அரசாங்கம் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடும் என்றும் அறிவித்துள்ளது.