அமெரிக்கா பறந்தார் மைத்திரி : நாடு திரும்பியதும் புதிய நியமனங்கள்

அமெரிக்காவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன இன்று அதிகாலை சென்றுள்ளார்.

இந்தியாவில் உள்ள புதுடெல்லி சென்று பின்னர் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் அமெரிக்கா செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெளிநாட்டு விஜயத்தின் பின்னர் புதிய கூட்டணிக்கான நியமனங்கள் இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன ஐக்கிய முன்னணியின் கீழ் புதிய கூட்டணியை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கூட்டணியின் பொதுச் செயலாளராக லசந்த அழகியவண்ண நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் மைத்திரிபால சிறிசேனவின் வெளிநாட்டு விஜயம் நிறைவுபெற்றதும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *