சனத் நிஷாந்தாவின் வெற்றிடத்திற்காக நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார் ஜகத் பிரியங்கர்

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக ஜகத் பிரியங்கர இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு தேசிய சுதந்திர முன்னணியின் சார்பில் ஜகத் பிரியங்கர நியமிக்கப்பட்டார்.

கடந்த 25 ஆம் திகதி கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற கோர விபத்தில் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் உயிரிழந்திருந்தனர்.

இந்நிலையில் இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக ஜகத் பிரியங்கர இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *