கடன் மறுசீரமைப்பின் பின்னர் 5 பில்லியன் அமெரிக்க டொலரை எதிர்பார்க்கும் இலங்கை

வெளிநாட்டு கடனை மறுசீரமைப்பு முடிந்தவுடன் அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 5 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு நிதிகளை இலங்கை ஈர்க்கும் என எதிர்பார்ப்பதாக வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார்.

அனைத்து முக்கிய கடன் வழங்குநர்களுடனும் மே மாதத்திற்குள் உடன்படிக்கைகளை மேற்கொள்வோம் என நம்புவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.

நெருக்கடியின் போது இடைநிறுத்தப்பட்ட நெடுஞ்சாலை, விமான நிலையத்தின் விரிவாக்கம் மற்றும் ஜப்பானுடனான இலகு ரயில் திட்டம் உட்பட முக்கிய உட்கட்டமைப்பு திட்டங்களில் கவனம் செலுத்தவுள்ளது.

இலங்கையின் தனியார் கடன் வழங்குநர்கள் சர்வதேச இறையாண்மை பத்திரங்கள் உட்பட சுமார் 16 பில்லியன் அமெரிக்க டொலர் கடனைக் கொண்டுள்ளனர் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கூறினார்.