கெஹலிய ரம்புக்வெல்ல இராஜினாமா

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல, சுற்றாடல் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அமைச்சர் பதவியில் இருந்து விலகும் கடிதம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில் நிலையில், ஜனாதிபதியினால் இராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

தரமற்ற இம்யூனோகுளோபுலின் கொள்வனவு தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால்கடந்த 02 ஆம் திகதி கைது செய்யப்பட்ட அவர் 15 ஆம் தெக்கத்தி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.