மோடியுடனான சந்திப்பிற்காக இந்தியா செல்கிறது தமிழரசுக் கட்சி !

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் சிறீதரன் தலைமையில் வடக்கில் உள்ள சில தமிழ் கட்சிகளின் தலைவர்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாட புதுடெல்லி செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழரசுக் கட்சியின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர், கட்சிக்கான செல்வாக்கு ஓரளவு அதிகரித்துள்ளதாக கருதப்படும் பின்புலத்திலேயே இந்த சந்திப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதுகுறித்து தமிழரசுக் கட்சியின் தலைவர் சிறீதரனிடம் வினவிய போது, இந்திய பிரதமரை சந்திப்பதற்கான முயற்சிகள் எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்றும் அது நடைபெறும் பட்சத்தில் அறிவிப்போம் என்றும் பதிலளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *