லண்டனில் நூற்றுக்கணக்கான பிரித்தானிய தமிழர்கள் போராட்டம்

இலங்கையின் 76வது சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக பிரகடனப்படுத்தி பிரித்தானியாவில் போராட்டம் இடம்பெற்றது.

லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கான தமிழர்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை அடுத்து போராட்டக்காரர்கள் ஹைட் பார்க் பிளேஸ் வழியாக அணிவகுத்து பக்கிங்ஹாம் அரண்மனை நோக்கிச் சென்றிருந்தனர்.

இலங்கையின் 76வது சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக பிரகடனப்படுத்தி வடக்கு, கிழக்கு மற்றும் புலம்பெயர் தமிழர்கள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்த்க்கது.