காட்டுத் தீயில் சிக்கி 40 பேர் உயிரிழந்ததையடுத்து சிலியில் அவசரநிலை பிரகடனம்

நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான காட்டுத் தீயில் சிக்கிகுறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ள நிலையில் சிலியில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

குறைந்தது 40 பேர் இறந்துள்ளதாகவும், இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் சிலியின் ஜனாதிபதி கேப்ரியல் போரிக் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் தீக்காயங்கள் காரணமாக மேலும் ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.