பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மகன்களில் ஒருவரான யோஷித ராஜபக்ஷவுக்கு சொந்தமான சொத்துக்கள் பற்றிய தகவல்களையும் ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க நேற்று அம்பலப்படுத்தியிருந்தார்.
யோஷித ராஜபக்ஷவுக்கு சொந்தமான ஹம்பாந்தோட்டை உள்ள சிறிபோபுர காட்டுப்பகுதியில் தலா 1.6 மில்லியன் ரூபாய் பெறுமதியான 3 காணிகள் தொடர்பான உறுதியை அவர் அமபலப்படுத்தியுள்ளார்.
மேலும் 80 மில்லியன் ரூபாய் பெறுமதியான நேரடி ஒளிபரப்பு வாகனம், பத்தரமுல்லையில் சி.எஸ்.என் வலையமைப்பின் 200 மில்லியன் ரூபாய் கட்டிடமும் அவரது பெயரில் இருப்பதாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு பத்தரமுல்லையில் உள்ள 235 மில்லியன் மதிப்புடைய கார்ல்டன் ஸ்போர்ட்ஸ் வலையமைப்பு, 138 மில்லியன் பெறுமதியான நுகேகொடையில் அமைந்துள்ள காணி மற்றும் கட்டிடம் குறித்தும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் ராஜபக்ச அறக்கட்டளைக்கு காணி மாற்றப்பட்ட நிலையில் தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட சொத்து எவ்வாறு தொலைக்காட்சி நிலையத்தை நடத்தி முடித்தது என்றும் அனுரகுமார திஸாநாயக்க கேள்வியெழுப்பினார்.
இந்நிலையில் யோஷித ராஜபக்ஷவுக்கு சொந்தமாக பல காணிகள் இருப்பதாக அனுரகுமார திஸாநாயக்க வெளியிட்ட தகவல் தொடர்பாக பிரதமர் அலுவலகம் கண்டனம் வெளியிட்டுள்ளது.
மேலும் அநுரகுமார திஸாநாயக்கவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.