தொழில்சார்ந்த போக்குவரத்தில் ஈடுபடுபவர்கள், பாடசாலை வாகனங்கள், அலுவலக ஊழியர்கள் செல்லும் வாகனங்கள் மற்றும் கொள்கலன் போக்குவரத்து வாகனங்களுக்கு முன்னுரிமை அளித்து எரிபொருள் விநியோக திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ரேஷன் திட்டத்தின் கீழ் எரிபொருளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இத்திட்டத்தை விரைந்து செயற்படுத்த ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இந்த வேலைத்திட்டம் தொடர்பாக போக்குவரத்து துறை தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கும் இடையில் நேற்று சனிக்கிழமை கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.