இந்த ஆண்டு அதிகளவான இலங்கையர்கள் வறுமையில் வாடுவார்கள் என எச்சரித்துள்ள இலங்கை வங்கி தாக்கங்களைக் குறைப்பதற்கும் அரசாங்கம் அவசர கொள்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கை தற்போது வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
இந்நிலையில் இலங்கையில் சுமார் 11.7 வீதமான மக்கள் நாளொன்றுக்கு 3.20 அமெரிக்க டொலர்களுக்கும் குறைவாகவே சம்பாதிப்பதாக உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டில் வறுமை அதிகரிப்பதற்கு மற்றைய காரணம், சுமார் 1.2 மில்லியன் ஏழைக் குடும்பங்களை உள்ளடக்கிய சமுர்த்தித் திட்டம் போதுமானதாக இல்லாததே என உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
ஏழைகளில் பாதிக்கும் குறைவானவர்களே சமுர்த்தியின் பயனாளிகள் என்றும், நன்மைத் தொகைகள் பெரும்பாலும் போதுமானதாக இல்லை என்றும் அது கூறியது.
மேலும் கொரோனா தொற்றுநோய் காரணமாக, இலங்கையின் பொருளாதாரம் 2020 இல் 3.6 சதவீதத்தால் சுருங்கியது என்றும் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.