2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரம், உயர்தரம் மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதிகளை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி சாதாரணதர பரீட்சை மே 23 முதல் ஜூன் 1 ஆம் திகதி வரை ஒன்பது நாட்களுக்கு நடைபெறும் என பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்தார்.
இதவேளை தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 6ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது என அவர் அறிவித்துள்ளார்.
குறித்த பரீட்சைகளுக்கான அனைத்து வினாத்தாள்களை மே 21ஆம் திகதிக்குள் அனைத்து மாகாணகளுக்கும் வழங்கப்படும் என அவர் மேலும் கூறியுள்ளார்.
3842 பரீட்சை நிலையங்களில் 407,129 பாடசாலை மாணவர்கள் மற்றும் 110,367 தனியார் பரீட்சார்த்திகள் என மொத்தம் 517,496 பரீட்சார்த்திகள் O/L பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.
இதேவேளை 2022 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை ஒக்டோபர் 17 ஆம் திகதி முதல் நவம்பர் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இருப்பினும் பரீட்சைக்கான விண்ணப்பங்களை பரீட்சைகள் திணைக்களம் இதுவரையில் கோரவில்லை என ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.