நீர்கொழும்பு பெரியமுல்ல பகுதியில் இரு தரப்பினருக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
பிரதேச அரசியல்வாதி ஒருவரின் ஆதரவுடன் கூடிய குழுவொன்று அப்பகுதியில் உள்ள வீடுகள் மீது கொள்ளையில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அவென்ரா கார்டன்ஸ் மற்றும் கிராண்டீசா ஹோட்டல்களுக்கு அருகில் உள்ள வீதிகளில் குறித்த குழுக்கள் தீவைத்துள்ளன.
தற்போது சம்பவ இடத்திற்குச் சென்று நிலைமையைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவத்தில் 04 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. https://youtube.com/shorts/lkjscwXLVnQ?feature=share