பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்தில் எந்தவொரு அமைச்சுப் பதவிகளையும் ஏற்றுக் கொள்வதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது.
கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அக்கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்தார்.
மேலும் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் புதிய பிரதமரின் அழைப்பை நிராகரிப்பதாக அவர் தெரிவித்தார்.
இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்துசுதந்திரக் கட்சியின் மத்திய குழு இன்று விரிவான பேச்சு நடத்தியதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமையும் அரசாங்கத்தின் எந்தவொரு நடவடிக்கைகளிலும் தமது கட்சி பங்குபற்றாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.