அத்தியாவசிய சேவைகள் தவிர, அத்தியாவசியமற்ற அரச ஊழியர்களை நாளை (வெள்ளிக்கிழமை) பணிக்கு சமூகமளிக்க வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றில் உரையாற்றிய அவர், எரிபொருளைச் சேமிப்பதற்காக அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.
அதனூடாக எரிபொருளை பாதுகாத்து இந்த வார இறுதியை சமாளித்துக்கொள்ள முடியும் என்றும் அதன்பின்னர் இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.