இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இன்று வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி முன்னிலையில் அவர் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார்.
இதன்மூலம் ஆறாவது முறையாக இலங்கையின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவி ஏற்றுள்ளதோடு , நாட்டின் 14ஆவது பிரதமராக அவர் பதவி வகிக்கிறார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அமைச்சரவை அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கியதாக எதிர்வரும் நாட்களில் நியமிக்கப்படவுள்ளது.