அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்கு சட்டங்களில் திருத்தம் – பிரதமர் ரணில் முன்மொழிவு !
1 min read
அரசாங்கத்தின் வருவாயை அதிகரிக்க சில சட்டங்களில் திருத்தம் செய்ய பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்மொழிந்துள்ளார்.
அதன்படி பின்வரும் சட்டங்களை திருத்துவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2017 ஆம் ஆண்டு 24 ஆம் இலக்க உள்நாட்டு வருவாய் சட்டம், 2002 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க தொலைத்தொடர்பு வரிச்சட்டத்தில் மாற்றத்தை கொண்டுவர அவர் தீர்மானித்துள்ளார்.
2011 ஆம் ஆண்டு 21 ஆம் இலக்க பந்தயம் மற்றும் சூதாட்ட விதிப்பனவுச் சட்டம் மற்றும் நிதி மேலாண்மைச் சட்டதில் மாற்றத்தை கொண்டுவர பிரதமர் தீர்மானித்துள்ளார்.
இதேவேளை 695 பில்லியனுக்கான இடைக்கால கணக்கறிக்கையை சமர்ப்பிக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த தீர்மானத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.