க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் போது எவ்வித மின்வெட்டுகளையும் ஏற்படுத்த வேண்டாம் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளது.
அந்தவகையில் எதிர்வரும் 22ஆம் திகதி மாலை 6.30 மணி முதல் ஜூன் மாதம் முதலாம் திகதி வரையில் இவ்வாறான மின்வெட்டுகளை தவிர்க்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருள் மற்றும் நீர் வசதிகளை வழங்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
முதலாம் தவணை இன்றுடன் (19) முடிவடையும், இரண்டாம் தவணைக்காக பாடசாலை ஜூன் 06 ஆம் திகதி ஆரம்பமாகும் – கல்வி அமைச்சு