உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு அமுல், அவசரகால சட்டத்தை அமுல்படுத்தவும் உத்தரவு
1 min read
மேற்கு மாகாணத்தில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த இலங்கை பிரதமர் (பதில் ஜனாதிபதி) உத்தரவிட்டுள்ளார்.
பிரதமர் அலுவலகம் பிரதமர் இலங்கையின் தற்காலிக ஜனாதிபதி என்பதை உறுதிப்படுத்துகிறது.
பதில் ஜனாதிபதி என்ற வகையில், மேல் மாகாணத்தில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இதேவேளை நாடளாவிய ரீதியில் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துமாறும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதேவேளை கலவரங்களில் ஈடுபடும் நபர்களை உடனடியாக கைது செய்யுமாறும், அவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை கையகப்படுத்தவும் பாதுகாப்புப் படையினருக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.