இலங்கையானது இரண்டு மாதங்களுக்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாளர் மட்ட அல்லது ஆரம்ப உடன்படிக்கையை எட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கை வர்த்தக சம்மேளனத்தில் உரையாற்றியபோது மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஒப்பந்தத்தை எட்டுவதற்கு முன்னர், அத்தியாவசியம் என கருதப்படும் நடவடிக்கைகளை இலங்கை பூர்த்திசெய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
அதன்பின்னரே, இலங்கையினால் இடைநிறுத்தப்பட்ட வெளிநாட்டுக் கடன் மீள செலுத்தல் செயற்பாடுகளை மறுசீரமைக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க முடியும் என ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.