அவுஸ்ரேலிய தேர்தலில் இலங்கை வம்சாவளிப் பெண் அமோக வெற்றி !!
1 min read
அவுஸ்ரேலிய தேர்தலில் வில்ஸ் பகுதியில் போட்டியிட்ட இலங்கை வம்சாவளி பெண் ஒருவர் அமோக வெற்றி பெற்றுள்ளார்.
தொழிற்கட்சி வேட்பாளர் கசாண்ட்ரா பெர்னாண்டோ, இலங்கையைச் சேர்ந்த லிபரல் கட்சியின் ரங்கே பெரேராவை தோற்கடித்ததாக கூறப்படுகிறது.
11 வயதில் தனது குடும்பத்துடன் அவுஸ்ரேலியா சென்ற அவர் அன்றிலிருந்து மெல்போர்னில் வசித்து வருகிறார்.
அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட முதலாவது இலங்கையர் என்ற வரலாற்றை கசாண்ட்ரா பெர்னாண்டோ படைக்கவுள்ளார்.