உரத்தடை மற்றும் உக்ரைன் போரினால் நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையின் முக்கிய தேயிலை ஏற்றுமதி 23 வருடங்களில் மிகக் குறைந்த மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் நேற்று வெளியிட்டபட்டுள்ளன.
நாட்டின் மிகப்பெரிய ஏற்றுமதிப் பொருளாக தேயிலை உள்ளது, தற்போதைய பொருளாதார வீழ்ச்சிக்கு முன் ஆண்டுக்கு 1.3 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டி வந்த இலங்கை, 1948 இல் சுதந்திரத்திற்குப் பின்னர் மிக மோசமான நிலையை எதிர்கொண்டுள்ளது.
அந்தவகையில் உர இறக்குமதிக்கு தடை, வெளிநாட்டு நாணய கையிருப்பு இன்மை என்ற பல காரணத்தினால் நவம்பர் 2021 முதல் பெப்ரவரி 2022 வரையிலான காலகட்டத்தில் உற்பத்தி 18 சதவிகிதம் வீழ்ச்சியடைந்து, இது விவசாயிகளை கடுமையாக பாதித்தது.
2022 ஆம் ஆண்டில் முதல் காலாண்டு ஏற்றுமதி 63.7 மில்லியன் கிலோவாக சரிந்துள்ளது, இது கடந்த ஆண்டு ஜனவரி-மார்ச் காலகட்டத்தில் 69.8 மில்லியன் கிலோவாக இருந்தது என சுங்கத் தரவுகள் தெரிவிக்கின்றன.