19 மற்றும் 20 ஆவது திருத்தத்தில் உள்ள முக்கிய விடயங்களுடன் 21 ஆவது திருத்தத்தை கொண்டுவர பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்ட வரைவை தயாரிப்பதற்காக நீதி அமைச்சர் தலைமையில் உப குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற புதிய அமைச்சரவை கூட்டத்தின் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.