புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று மாலை இடம்பெறவுள்ளது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் அதிகாரங்களை மட்டுப்படுத்தி நாடாளுமன்றத்திற்கு அதிக அதிகாரங்களை வழங்க பிரதமர் தீர்மானித்துள்ளார்.
இந்நிலையில் அதற்கான பிரேரணை இன்று (25) இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பிரேரணை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படம் என தெரிவிக்கப்படுகின்றது.