புதிய பிரதமர் பதவிக்காக பரிந்துரைக்கப்பட்ட பெயர்கள் இன்னும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பிரதமராக பதவியேற்பாராயின் அதற்கு ஆதரவு வழங்க தயார் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி பதவி விலகினால் தான் பதவியேற்பேன் என கூறிக்கொள்ளும் தருணம் இதுவல்ல என்றும் நிலைமை எல்லை மீறி சென்றுள்ளதை சஜித் பிரேமதாச விளங்கிக்கொள்ள வேண்டும் என சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.