அதிக தேவை உள்ள பகுதிகளுக்கு முன்னுரிமை அளித்து சமையல் எரிவாயு விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
கப்பல் மூலம் கொண்டுவரப்பட்ட 1,400 மெட்ரிக் தொன் எரிவாயுவை கப்பலிலிருந்து எரிவாயு இறக்கும் பணி நேற்று இரவு நடைபெற்றது.
இந்த மாதம் கோரப்பட்டுள்ள மேலும் இரண்டு எரிவாயு தாங்கி கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த கப்பல்கள் பெரும்பாலும் 24 மற்றும் 26 ஆம் திகதிகளில் இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவற்றின் மூலம் மொத்தமாக 8,500 மெட்ரிக் தொன் எரிவாயு கொண்டுவரப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.