இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலின் பயணத் தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்த தடை விசாரணை முடியும் வரை அமுலில் இருக்கும் என கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளது.
அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக தொடரப்பட்ட குறித்த வழக்கிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜூன் 7 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கப்ராலுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்ட அதேவேளை கடவுச்சீட்டையும் நீதிமன்றில் ஒப்படைக்குமாறும் உத்தரவிடப்பட்டது.