இலங்கையில் இருந்து இன்று (25) அதிகாலை 5 குடும்பத்தை சேர்ந்த மேலும் 15 பேர் அகதிகளாக தமிழகத்தின் தனுஷ்கோடியை சென்றடைந்துள்ளனர்.
நெடுந்தீவு கடற்கரையில் இருந்து ஒரு படகில் ஆணைக்கோட்டை மற்றும் காக்கைதீவை சேர்ந்த 9 மாத கைக் குழந்தை உட்பட 5 குடும்பத்தை சேர்ந்த 15 பேரே இவ்வாறு தமிழகம் சென்றுள்ளார்கள்.
இவர்கள் இன்று அதிகாலை 03.00 மணியளவில் தனுஷ்கோடி அடுத்த கோதண்டராமர் கோவில் கடற்கரையைச் சென்றடைந்தனர்.
இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ராமேஸ்வரம் கடலோர பொலிஸார் அவர்களை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.