செர்பிய பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான அரையிறுதி போட்டி ஒன்றில் ரஷ்ய வீரர் அண்ட்ரே ரூப்லெவ் வெற்றிபெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
நேற்று இடம்பெற்ற அரையிறுதி போட்டியில் இத்தாலியின் பெபியோ போக்னிநியும் ரஷ்ய வீரர் அண்ட்ரே ரூப்லெவ்வும் பலப்பரீட்சை நடத்தினர்.
விறுவிறுப்பாக இடம்பெற்ற இப்போட்டியில் 6-2, 6-2 என்ற நேர் செட்கணக்கில் இலகுவாக வெற்றிபெற்று இறுதி போட்டிக்கு அண்ட்ரே ரூப்லெவ் தகுதி பெற்றார்.